மனிதனுக்கு குணங்கள் மூன்று. சத்துவ, ராஜஸ, தாமத குணங்கள்தான் அவை. இந்த மூன்று குணங்களும் உணவினாலேயே அமைகின்றன.
அவல், பொரி, அப்பம், பழம், பால், தேன் போன்ற உணவுகள் சத்துவ குணத்தை வளர்க்கின்றன. சாந்தம், அன்பு, அடக்கம், பொறுமை, கருணை போன்றவை சத்துவ குணத்தால் வருகின்றன.
காரம், புளி, ஈருள்ளி வெங்காயம், முள்ளங்கி போன்ற உணவுகள் ராஜஸ குணத்தை வளர்க்கின்றன. கோபம், டம்பம், வீண் பெருமை, அகங்காரம் போன்றவை இந்த ராஜஸ குணத்தால் வருகின்றன.
பழையது, புண்ணக்கு, மாமிசம் போன்ற உணவுகள் தாமத குணத்தை வளர்க்கின்றன. தூக்கம், சோம்பல், மயக்கம் போன்றவை தாமத குணத்தால் வருகின்றன.
– இப்படிச் சொல்பவர், திருமுருக கிருபானந்த வாரியார்.