நல்லவனாக இரு; நல்லதை செய்!
ஜூலை 14 – சிவானந்தர் முக்தி தினம்
ஒரு குழந்தை சிறுவயதில் பெற்றோரால் எப்படி வளர்க்கப்படுகிறதோ, அதைப் பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும் என்பர். அவ்வாறு சிறுவயதிலேயே பழக்கப்படுத்தப்பட்ட நற்குணங்களால், வளர்ந்து வாலிபனான பின், கருணை உள்ளத்துடன், அன்பு, தொண்டு, தானம் செய்தல் என, தன்னை ஆன்மிக பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர், சுவாமி சிவானந்தர்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில், செப்., 8, 1887ல், சிவானந்தர் அவதரித்தார். தந்தை வெங்கு ஐயர்; தாய் பார்வதி அம்மையார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் குப்புசுவாமி. எட்டயபுரத்திலுள்ள ராஜா உயர் நிலைப்பள்ளியில் படித்த போது, பாரதியாரும், அவரும் நண்பர்கள் ஆயினர்.
குப்புசுவாமி சிறுவனாக இருந்த காலத்திலேயே மிகுந்த இரக்க குணத்துடன் விளங்கினார். அதுவே பிற்காலத்தில், அவரை ஜாதி, மத பேதமற்று, அனைத்து உயிர்களையும் நேசிக்கத் தூண்டியது.
குப்புசுவாமிக்கு நீச்சல் என்றால், மிகவும் பிரியம். சிறந்த வீரரும் கூட. அதிலும் கிணற்றுக்கு மேலிருந்து கிணற்றுக்குள் குதித்து, தண்ணீரில் நீண்ட நேரம் மூழ்கி எழுவார். மற்றவர்களை திகைக்க வைக்கும் சாகசங்களைச் செய்வார். ஆன்மிகத்திற்கு அடிப்படை தேவையே இத்தகைய தைரியமும், வைராக்கியமும் கலந்த உணர்வு தான்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படித்த குப்புசுவாமி, பணிக்காக மலேசியா சென்றார். ஏராளமாக சம்பாதித்தாலும், அவர் மனம், துறவறத்தையே விரும்பியது. அதனால், அவர் இமயமலைக்கு சென்று தவமிருந்தார். அங்கிருந்த சுவாமி விஸ்வானந்தர், குப்புசுவாமி என்ற பெயரை, ‘சிவானந்தர்’ என்று மாற்றி, தீட்சை அளித்தார்.
‘மத அமைப்புகளின் பெயர் தான் மாறுபடுகிறதே தவிர, அவற்றின் நோக்கம் ஒன்றுதான். அது, மனித வாழ்வை தெய்வீக மயமாக்குவது…’ என்பார் சிவானந்தர். தன் கொள்கைக்கேற்ப, தன் ஸ்தாபனத்திற்கு, ‘தெய்வீக வாழ்க்கை சங்கம்’ என்று, பெயரிட்டார்.
‘மனிதன் கடவுளிடமிருந்து எல்லாவற்றையும் பெறுகிறான். ஆனால், அவரை மறந்து விடுகிறான். கடவுள் எல்லாவற்றையும் கொடுக்கிறார்; ஆனால், தன்னை மறந்தவர்களையும் மன்னித்து விடுகிறார்…’ என்று, கடவுளின் இயல்பைக் கூறும், சிவானந்தர், கட்டுப்பாடுடன், கூடிய மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.
தியானத்தை கடைபிடிக்கும் போது கூட, உணவில், உப்பு, சர்க்கரை, மிளகாய், புளி போன்றவற்றை கைவிட்டதாக, அவரது டைரி குறிப்பு கூறுகிறது. மேலும், காய்ந்த ரொட்டியை கங்கை நீரில் கரைத்துக் குடித்துள்ளார். பல சமயங்களில் இது மட்டுமே இவரது உணவாக அமைந்துள்ளது.
சிவானந்தர், 300 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவை எல்லாவற்றிலுமே, நல்லவனாக இரு; நல்லதையே செய்; என்பதே முக்கிய கருத்து. பல்வேறு பணிகளுக்கும் மத்தியில், இவ்வாறு ஏராளமான நூல்களை எழுதியது எப்படி சாத்தியமானது என்று கேட்போருக்கு, ‘ஒரு வேலைக்கு ஒரு மணி நேரம் என, ஒதுக்கிக் கொள்ள வேண்டும். இச்சமயத்தில் இன்ன வேலை என்று வகுத்து, அதைச் சரியாகச் செய்து விட்டால் போதும். ஆறே மாதத்தில் உங்கள் வேலைகள் அத்தனையும் எந்தளவு முன்னேறியுள்ளது என்பதை நீங்களே உணர்வீர்கள். முதலில் உங்கள் மனதில் சரியான திட்டமிடல் உருவாக வேண்டும்…’ என்பார்.
இவர், 1963, ஜூலை 14ல் முக்தியடைந்தார். சுவாமி சிவானந்தரின் மனஉறுதி, நமக்கும் ஏற்பட அவரது ஆசியை வேண்டுவோம்.
ஃப்ரியா படுத்தா சந்தோசம் அதிகமாகுமாம்!
லண்டன்: படுக்கை அறையில் ஆடையின்றி உறங்கினால் தம்பதியரிடையே மகிழ்ச்சி அதிகமாகும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஜெ–25( தாறுமாறு தகராறு முதல் வீரவெற்றி வரலாறு வரை)-ஜூனியர் விகடன்
ஜெயலலிதா வாழ்வில் வெள்ளி முளைக்கிறது!
தலைவிரி கோலமாக சட்டமன்றத்துக்குள் இருந்து அவர் வெளியில் ஓடி வந்ததும், இன்று யாரும் எட்ட முடியாத தனிப் பெரும் சக்தியாகத் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் இடையில் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் 1989-ம் ஆண்டு நுழைந்தார் ஜெயலலிதா. இதோ, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜூலை 10-ம் தேதி நுழைய இருக்கிறார். அவரது சட்டமன்ற வரலாற்றின் வெள்ளி விழா ஆண்டு, ஜூலை 10 முதல் தொடங்கவிருக்கிறது!
இந்த 25 ஆண்டில் சுமார் 13 ஆண்டுகள் தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். சில ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தார். ஐந்து ஆண்டுகள் இரண்டையுமே இழந்து, சட்டமன்றத்துக்குள்கூட வர முடியாமல் மக்கள் மன்றத்தால் தோற்கடிக்கப்பட்டுக்கிடந்தார். அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் இது ஒரு நீண்ட காலகட்டம்தான்.
காஸை சிக்கணப்படுத்துவது எப்படி?
- * ரப்பர் டியூபில் சிறிது காஸ் லீக் ஆனாலும், டியூப் வாங்கி புதிதாக பொருத்த வேண்டும்.
- * காஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன், சமையலுக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும், பாத்திரங்களையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு, ஸ்டவ் அருகே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து வருவது ஒருபோதும் கூடாது.
- * சமையலுக்கு கூடுமானவரை அகலமான அடிப்பாகம் உள்ள பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், ஜுவாலை மூலம் கிடைக்கும் வெப்பம் அதிகமாக சமையலுக்கு உதவும்.
வேர்ட் டிப்ஸ்
இணைத்த செல்களைப் பிரிக்க: வேர்டில் டேபிள் ஒன்றில், செல்களை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பலமுறை இங்கு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, இவ்வாறு இணைத்த செல்களை, எப்படி நம் விருப்பப்படி பிரிக்கலாம்? அதாவது மூன்று செல்களை இணைத்த பின்னர், அதனை நான்காகப் பிரிக்க வேண்டும் என எண்ணினால், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.
1. ஏற்கனவே இணைக்கப்பட்ட செல்லில் ரைட்கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Split Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Split Cells என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் கிடைக்கும், கண்ட்ரோல்களைப் பயன்படுத்தி, எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை இந்த இணைக்கப்பட்ட செல்லில் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடவும்.
2. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட செல்களைப் பார்த்தால், டேபிளின் மற்ற செல்களுடன் இணைவாக இவை இருக்க மாட்டா. இவற்றை நாமே அட்ஜஸ்ட் செய்து சரியாக அமைக்கலாம்.
உணவு யுத்தம்!-22
வேர்க்கடலை பெருகிய கதை!
தமிழ்நாட்டில் வேர்க்கடலை பிரபலமானதற்கும், கடலை எண்ணெய் உற்பத்தியில் தென்னாற்காடு முதல் இடம் வகிக்கவும் கோவிந்த அய்யர் என்பவர் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார் என பேராசிரியர் கெ.குமார் சுட்டிக்காட்டுகிறார். அறியப்படாத இந்த ஆளுமையை பற்றி பழைய ’மஞ்சரி’ இதழில் எம்.ஆர்.ராஜகோபாலன், ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார்.