எக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், எனக்கு இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட எப்படி செட் செய்திட வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.
உணவு யுத்தம்!-32
16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கடல் பயணிகள் உருளைக்கிழங்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தினர். 17-ம் நூற்றாண்டில் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப் பகுதிகளில் அறிமுகமானது. அப்போதுதான் இந்தியாவுக்கும் உருளைக்கிழங்கு வந்து சேர்ந்தது.
உலகளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி 315 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதில் நான்கில் ஒரு பகுதி, அதாவது 79 மில்லியன் மெட்ரிக் டன்களை சீனா உற்பத்தி செய்கிறது. அடுத்த இடம் ரஷ்யாவுக்கு. இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
உருளைக்கிழங்கு உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்துவதற்காக சர்வதேச மையம் ஒன்று பெரு நாட்டின் தலைநகர் லிமா நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சி மையம் சிம்லாவில் உள்ளது.
எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க…
1. ஏழு மணி நேரக் கும்மிருட்டுத் தூக்கத்துக்குப் பின், இளங்காலை மொட்டைமாடி வெயிலில் 20 நிமிட உலாவல், தோட்டத்து வேப்பங்காற்றில் கபாலபாதி பிராணாயாமம், பின்னர் நலுங்கு மாவு தேய்த்துக் குளியல், காலையில் கரிசாலை முசுமுசுக்கைத் தேநீர், மத்தியானம் தூய மல்லிச்சம்பா சோறு, அதற்கு மிளகுவேப்பம்பூ ரசம், ‘தொட்டுக்கா’வாக நெல்லிக்காய்த் துவையல், இரவில் சிவப்பு அரிசி அவலுடன் சிவப்புக் கொய்யா சாப்பிட்டு வந்தால், எந்தத் தொற்றும் நெருங்க நிச்சயம் யோசிக்கும்!
ஆட்டோ பார்மட் எங்கு உள்ளது?
வேர்ட் புரோகிராம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலம் தொடங்கி, அதன் ஆட்டோ பார்மட் டூல் பல வகை திருத்தங்களை மேற்கொள்ள உதவி வந்தது. குறிப்பிட்ட டெக்ஸ்ட் அல்லது முழு டாகுமெண்ட்டினைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர், Format | AutoFormat கிளிக் செய்தால், வேர்ட் நாம் அமைத்து வைத்த பார்மட்டில், அந்த டெக்ஸ்ட்டினை அமைத்துத் தரும்.
இந்த வசதி தந்த டூல், வேர்ட் 2007க்குப் பின்னர், நீக்கப்பட்டதாகக் காட்சி தந்தது. ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், வேர்ட் புரோகிராமினை வடிவமைத்தவர்கள், இந்த டூலை அநேகம் பேர் பயன்படுத்தவில்லை என்று கருதி, எடுத்துவிட்டனர். அதனாலேயே, வேர்ட் 2007 தொகுப்பிலும், ரிப்பன் கிளிக் செய்து அதன் மெனுக்களில் தேடினாலும், இந்த டூல் கிடைப்பதில்லை. ஆனால், உண்மையிலேயே, இந்த டூல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்த நீங்கள் ஆர்வம் உடையவராக இருந்தால், தேடி அமைத்துக் கொள்ளும்படி மைக்ரோசாப்ட் விட்டுவிட்டது.
வேர்ட் டிப்ஸ்-சொற்களை எண்ணுகையில் ஹைபன் விலக்க:
சொற்களை எண்ணுகையில் ஹைபன் விலக்க: வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை அமைக்கையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களுக்குள், டாகுமெண்ட்டை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கு ஏற்படும். பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகள், மொழி பெயர்ப்பு ஆவணங்கள் போன்றவற்றில் இந்த கட்டுப்பாட்டினைப் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதற்கென டாகுமெண்ட்டினை உருவாக்குகையில், பல நிலைகளில் மொத்த சொற்களின் எண்ணிக்கையினை, வேர்ட் கவுண்ட் (Word Count) என்ற டூல் மூலமாகப் பார்ப்போம். இதில் ஹைபன் என்னும் சொற்களுக்கு இடையேயான கோடுகளால், பிரச்னை ஏற்படும். இவற்றைத் தனிச் சொற்களாக எடுத்துக் கொண்டு இந்த டூல் செயல்படும். இவற்றை விலக்கி, சொற்களை எண்ண ஒரு சிறிய செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். அதனை இங்கு காணலாம்.
நாங்கள் லாபம் அடைய மன்மோகன்சிங் தான் காரணம்! இளவரசி, சுதாகரன் வக்கீல் சொல்கிறார்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாயின் வாதம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ‘இந்த வழக்குக்கு எப்படியும் இடைக்காலத் தடை வாங்கிவிட வேண்டும்’ என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு மேல் மனு போட்டுக் காத்திருக்கிறது ஜெயலலிதா தரப்பு.
‘கூட்டுச்சதியை நீக்க வேண்டும்!’
ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்! கணபதியே சரணம்!
கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீமுந்தி விநாயகர் ஆலயம். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.
இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
எதுவாக இருப்பினும், என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பாராம் இவர். எனவே, இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு!
‘முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு… இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!
வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை” என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள்.
‘பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.
‘சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.” எனத் தெரிவிக்கிறார் குருக்கள்.
விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிள்ளையாரைத் தரிசித்துச் செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!
கணபதி நம் குணநிதி!
ஆக., 29 – விநாயகர் சதுர்த்தி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான கடவுள் விநாயகர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்கிற வழியெல்லாம் ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, சாலையோரம் என, எல்லா இடங்களிலும் அமர்ந்திருக்கும் இவரே, நமக்குத் துணையாக வருபவர். இவருக்கு பிரமாண்ட கோவில் வேண்டாம்; நினைக்கும் நேரத்தில் நினைத்த இடத்தில், மஞ்சள் பொடி, களிமண் என எதில் பிடித்து வைத்தாலும், அதில் ஆவாஹனம் ஆகி, நமக்கு அருள்பாலிப்பார்.
ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க, விநாயகரை வணங்கி அவருடைய அனுக்ரகத்தைக் வேண்டுகிறோம். அம்பாள் பண்டாசுரனை வதம் செய்யும் போது, அசுரனும், அவனுடைய சகாக்களும் எய்த பாணங்களை, தன் யந்திரத்தினால் வீழ்த்தி, தேவியை வெற்றி பெறச் செய்தார் விநாயகர் என்பதை, லலிதா சகஸ்ரநாமத்தில், ‘மஹா கணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’ என்ற நாமா மூலம் அறியலாம். இதன் மூலம், இக்கட்டான சூழ்நிலையில் ஒரு செயலை முடிக்க நினைப்பவர்கள், விநாயகரை வணங்கி அந்த காரியத்தை துவங்கினால், அவர் நல்லபடியாக முடித்து தருவார்.
விநாயகருக்கு மிக எளிய உணவுகளே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ஆனால், அந்த எளிய உணவுக்குள் மிகப்பெரிய தத்துவங்கள் புதைந்துள்ளன. அவருக்கு மிகவும் பிடித்தது மோதகம்; இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இது விநாயகருக்கு படைக்கப்படுகிறது.
அதேபோல் கரும்பும் இவருக்கு பிடிக்கும்; இனித்தாலும் கடிப்பதற்கு கடினமானது கரும்பு. வாழ்க்கையும் இப்படித்தான், கஷ்டப்பட்டு உழைத்தால், இனிமையாக வாழலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இது படைக்கப்படுகிறது. அவல், பொரியை இவருக்கு படைப்பர்; ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருட்கள், வாழ்க்கையில் நாம் சந்திக்கிற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதை குறிக்கிறது.
அம்பாளுக்கு நவராத்திரி போல, விநாயகருக்கும் நவராத்திரி உண்டு. விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களை, ‘விநாயகர் நவராத்திரி’ என்பர். ஒரு காலத்தில், இந்ந ஒன்பது நாட்களும் விரதம் இருந்து விநாயகரை பூஜித்து, ஒரு விழாவாகவே கொண்டாடி உள்ளனர். இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு நிகழ்கால வாழ்வில் செல்வமும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும் என்பர். குணநிதியான கணபதியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!