கடைபிடித்தால் நலம்!
நம் வாழ்க்கை முறையில், சின்ன, சின்ன பழக்கங்களை முறையாக கையாண்டாலே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கென சில வழிமுறைகளை, தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மனித உடலுக்குத் தேவையான நீரை, தாகம் எடுப்பதன் மூலம் உடல் கேட்கிறது. தாகம் எடுக்கும்போது நீர் அருந்தாமல் இருப்பது தவறு. நிறைய நீர் குடிப்பது, பொதுவாக உடல் நலத்துக்கு நல்லது தான். ஆனால், அந்தத் நீர் சுத்தமான நீராக இருக்க வேண்டும்.
உடலுக்கு பலம் தரும் பருத்திப்பால்
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி பானம் குறித்து பார்க்கலாம்.