அதிகரிக்கும் ஞாபக சக்தி
நாம் உண்ணும் உணவில், இஞ்சியை சேர்த்துக் கொள்வதால், உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்து, கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால், இஞ்சி சாறில், சிறிது உப்பு கலந்து பருகினால், நிவாரணம் கிடைக்கும்.
உடலினை உறுதி செய்!
மனித சமுதாயம் எவ்வளவு தொன்மையானதோ, அவ்வளவு தொன்மையானது விளையாட்டுகள்.
மனிதனின் முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின. விளையாட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு செயல்.
மனிதனின் பொழுது போக்குக்காக மட்டுமின்றி, உடல் நலம், மன நலம் பேணுபவையாகவும் உள்ளன. வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கும் களம்
கை, கால்,குடைச்சல் சிண்ட்ரோம்
பக்கத்து ஊரிலிருந்து வருவார் அந்தப் பிணியாளர்.தலைவலி, கால்வலி, நெஞ்சுவலி, வயிறு உப்புசம், பசி இல்லை, தூக்கம் இல்லை, தூங்கினால் என்னென்னவோ தோன்றுகிறது, தூக்கத்தில் தானாக உளறுகிறேன் என்று உடம்பில் அத்தனை பகுதிகளிலும் புகார் வாசிப்பார். மேலோட்டமாகப் பார்த்தால் அவருக்கு இருப்பது மனப் பதற்ற நோய் (Anxiety disorder). ஆனால், நுட்பமாகப் பார்த்தால் அவரது விஷயமே வேறு மாதிரியானது.
சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த அவரது மகன் காதல் திருமணம் செய்துகொண்டார். அதுவும்
இன்சுலின் பயம் இனி இல்லை!
இன்றைய சூழலில் சர்க்கரைநோய் என்பது சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது. சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வழிகளும் நவீனமயமாகி வருகின்றன. இருந்தாலும், சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கப் போடப்படும் இன்சுலின் உபயோகம் குறித்த விழிப்பு உணர்வு நம் மக்களிடையே இன்னும் அதிகமாகவில்லை. இன்சுலின் யாருக்குத் தேவை, அதன் வகைகள், அதன் பயம் தீர்க்கும் வழிகள் அனைத்தையும் இங்கே விரிவாகப் பார்ப்போம்.
எப்போதெல்லாம் இன்சுலின் தேவை?