உள்ளங்கையில் கிரகங்கள்!
பஞ்சாங்குலி’ என்னும் ரேகை சாஸ்திரத்தின் முக்கியமான பகுதி உள்ளங்கையில் உள்ள மேடுகள். சதைப்பற்று மிக்க பகுதிகளே மேடுகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு மேடும் நமது வாழ்வின் ஒரு சில அம்சங்களைக் கட்டுப்படுத்தும் கேந்திரம். ஒவ்வொன்றுக்கும் ஒரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஓர் அடையாளக் குறி உண்டு. எந்தெந்த மேட்டில் எந்தெந்த கிரகங்களின் அடையாளக் குறிகள் அமைந்திருக்கின்றன என்பதைப் பொறுத்தே பலன்கள் ஏற்படுகின்றன.
சாலை ஒப்பந்ததாரர்களை மிரட்டும் அமைச்சர்!
இளநீர் ஒன்று எடுத்து வையும். வந்துவிடுகிறேன்’’ – போனில் சொல்லி முடித்த சற்று நேரத்திலேயே ஆஜரானார் கழுகார். ‘‘கடந்த ஜூ.வி இதழில் நீங்கள் சொன்னதுபோலவே சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவித்துவிட்டார்கள். ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை கடுமையாக அமல்படுத்தப் போகிறார்களாம். தகவலை முன்கூட்டியே சொன்னதற்கு சபாஷ்’’ என்ற கழுகாரிடம், ‘‘அதன் பின்னணியில் என்ன நடந்தது?” என்றபடி செவ்விளநீரை நீட்டினோம். இளநீரைப் பருகிக்கொண்டே தொடர்ந்தார் கழுகார்.
இந்திய மக்களிடையே அதிகரித்துவரும் இதயச்செயலிழப்பு… காரணம் என்ன? – மருத்துவர் விளக்கம்
கடந்த 90 நாள்களில் இதய நோய் மற்றும் இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள் என்னென்ன?
கொரோனா வைரஸ் அதிதீவிரமாகப் பரவிவரும் இந்நேரத்தில், என்.ஹெச்.எஃப்.ஆர் (National Heart Failure Registry) இந்தியாவிலுள்ள இதய நோயாளிகளிடையே ஓர் ஆய்வை மேற்கொண்டது. 6,437 இதய நோயாளிகள் 90 நாள்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களின் இறப்பு விகிதம் கணக்கிடப்பட்டது. இவர்களில், 7 நாள் இறப்பு விகிதம் 6.4%, 30 நாள் இறப்பு விகிதம் 12.2% மற்றும் 90 நாள் இறப்பு விகிதம் 17.1% என்று நிகழ்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.