கருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..
மே 2 ஆம் தேதிக்குப் பிறகு 100 ஜெயலலிதாவை அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் பார்ப்பார்கள்… 6 அமைச்சர்களுடன் சிலுவம்பாளையத்தில் தீவிர ஆலோசனை…
மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் நேற்றிரவு வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் மினி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கருப்பண்ணன், வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் கலந்துகொண்டுள்ளனர்.