அமைச்சரவை பட்டியல்… அதிருப்தியில் சீனியர்கள்!
குறித்த நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த கழுகாரிடம், “என்ன ஆச்சர்யமாக இருக்கிறதே!” என்றோம். “இன்று முதல் தினசரி நண்பகல் 12 மணியிலிருந்து பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறார்கள். நகரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நேரத்திலேயே கிளம்பிவிட்டேன். சாலைகளெல்லாம் வெறிச்சோடியிருக்கின்றன. வேறு வழியில்லை… கொரோனா தீவிர பரவல் காலகட்டத்தில் இப்படி இருப்பதுதான் நல்லது” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
டபுள் மாஸ்க்கிங் – நிச்சயமாக தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலை முதல் அலையை விட மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தச் சூழலில் நாம் மிகவும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியமாக உள்ளது. அதிலும் குறிப்பாக முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் சானிடைசர்கள் வைத்து கழுவுவது ஆகியவற்றை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.