உங்களின் தேவையைத் தீர்மானிப்பது யார்? – வாடிக்கையாளரின் ஆசையை தூண்டும் வியாபார உளவியல்
அத்தியாவசிய பொருளிலிருந்து ஆடம்பரப் பொருள் வரை நுகர்வோருக்கு இன்று ஆயிரம் தேர்வுகள் இருக்கின்றன.தனக்குத் தேவையானதை தேர்வு செய்யும் உரிமை நுகர்வோரிடம் இருக்கிறதா, இல்லை அவர்களின் தேவையை விற்பனையாளர்கள் தீர்மானிக்கிறார்களா- விளக்கம் தர முயற்சிக்கிறது இந்த கட்டுரை
‘கெத்து’ வலையில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை….! மீட்டெடுப்பது எப்படி?
முன்னெப்போதும் இருந்திராத வகையில் தமிழகம் முழுவதிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கின்றனர் பள்ளி மாணவர்கள்.
மாணவர்களின் இந்த செயல்களை பார்த்து தமிழக மக்கள் உண்மையில் மிரண்டு போயிருக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது. மாணவர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, அவர்களை எவ்வாறு திருத்துவது; அவர்களை
இதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்!
கையில் யாரிடமும் காசு தங்குவதில்லை. கடைசி வரை மக்கள் வறுமையிலேயே வாழ்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் மது. குடிப்பழக்கத்தால் உடல் நலன் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பபட்டு ஏழை குடும்பங்கள் நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கின்றன.
எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்!
* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.
மிரளவைக்கும் லைஃப் ஸ்டைல்! – அத்துமீறும் ஆடம்பரம்…
“படிக்க வேண்டிய வயசுல பல்சர் கேக்குறாங்க. பைக் ரேஸ், மது, புகை, காஸ்ட்லீ மொபைல் எனச் சுத்துறாங்க. முகத்தைப் பார்த்துப் பேசுறதைவிட முகநூலில்தான் அதிகமா இருக்காங்க. சுருக்கமாச் சொல்லணும்னா… நல்ல வாழ்க்கையைவிட, ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் இன்றைய தலைமுறை பசங்க எதிர்பார்க்குறாங்க.
அமைதியான நதியில்…!
மனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது.
மேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!
செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமைபட தெரிந்த அளவிற்கு, அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!
‘எவ்வளவு தேறும் இவருக்கு…’ என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, ‘இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா…’ என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது?
சமீப ஆண்டுகளில், அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள், சமூக பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. ‘கணவன் – மனைவிக்குள் ஒத்துவரலைன்னா பிரிந்துவிட வேண்டியது தான். அதானே இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது’ என்ற மனோபாவமும், இளம் வயதினரிடையே உள்ளது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வது என்பதற்கெல்லாம் நேரமும் இல்லை; பொறுமையும் இல்லை.
குறை கூறினால் கோபம் வருகிறதா?
நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக
தவறானது.
‘நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே… அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா… வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம் உடைஞ்சிருக்கும்; எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும்…’ என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட, ‘அப்படியா சொல்றீங்க?’ என்று முகம் பூரித்துப் போகும் முகரக் கட்டைகளும் இருக்கத் தான் செய்கின்றன.
சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்
நண்பர்கள் என்றால் நல்லா பேசுவர், நம்முடன் நேரம் செலவழிப்பர்; நம்மிடமிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வர். ஆனால், சிலர் தனக்ெகன்று ஒரு வேலையோ, வாய்ப்போ, வாழ்க்கையோ வந்து விட்டால், மிக சுயநலமாய், அப்படியே கழட்டிவிட்டுவர். சுயநலம் என்பது எவ்வளவு கொடுமை என்பது, அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
இவர்கள், நான் உனக்கு இதைச் செய்தால், நீ எனக்கு அதைச் செய் என, ஒப்பந்தத்தை மனதுக்குள் வைத்து கொள்வர். நீ மட்டும் அதைச் செய்தால், நான் உனக்காக இதைச் செய்துவிடுவேன் என, பதிலுக்கு பதில் செய்யத்தான் கணக்கு போடுவர். நட்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, சொந்தங்களுக்கு, உறவுகளுக்கு இடையிலும் இப்படி நடந்துக் கொள்வோர் இருப்பர்.பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே, நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாக இருக்க வேண்டும். வாழ்ந்தோம் எனும் சொல்லுக்கும், வாழ்வு எனும் சொல்லுக்கும் ஒரு சிறப்பான அர்த்தம் இருக்கிறது. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், பலருக்கும் அர்த்தமாக, உதாரணமாக வாழ்ந்தோம் என்று, வாழ்வு இருக்க வேண்டும்.