தோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி
தோள்பட்டைக்கு என்ன முக்கியத்துவம் ?
உடலில் முக்கியமானது தோள்பட்டை. இந்தப் பகுதியை தவிர மற்ற எந்த எலும்புகளும், குறிப்பாக கால்மூட்டு, கணுக்கால் உள்ளிட்டவைகள் பல திசைகளிலும் சுழலக்கூடிய பகுதியாக இல்லை. ஆனால் தோள்பட்டையுடன் கூடிய கைகளை நாம் பல்வேறு திசைகளிலும் சுழலச் செய்யலாம். அதனால் எலும்பியல் மருத்துவத்தில் தோள்பட்டை மிக நுட்பமாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு கைகளை உடலுடன் இணைக்கும் பகுதியாகும்.
சதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்!
எல்லா வயது பெண்களுக்கும், பொதுவான பிரச்னையாகிவிட்ட, சதைக் கட்டிகளுக்கு என்ன காரணம்?
கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள். இது ஏன் ஏற்படுகிறது என்பதற்கு, முழுமையான மருத்துவ காரணங்கள் நமக்கு தெரியாது.ஆனால், தெரிந்த சில காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் தான், சதைக் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
தெரிந்த காரணங்கள் எவை?
பாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன?
பாதத் தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னால்தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். ஆனால், `அது நல்லதல்ல. முகத்துக்குக் காட்டும் அக்கறையில் சரிபாதியையாவது, பாதத்துக்கும் காட்ட வேண்டும்.
ஞானப்பல் நல்லதா?
குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்கத் தொடங்கும். முதலில் தோன்றுபவை பால் பற்கள்; அவை விழுந்த பிறகே நிரந்தரமான பற்கள் முளைக்கும். 13 வயதுக்குள் மொத்தம் 28 பற்கள் முளைத்துவிடும். மீதமுள்ள நான்கு பற்கள் 17 வயதுக்கு மேல் முளைக்கும். அவைதான், `ஞானப்பற்கள்’ (Wisdom Teeth) என அழைக்கப்படுகின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து, சற்று வளர்ந்து பக்குவமான நிலையிலும், அறிவுத்திறனுடன் இருக்கும் நிலையிலும் இவை முளைப்பதால், ‘ஞானப்பல்’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
அர்ட்டிகேரியா என்கிற காணாக்கடி
பலருக்கும் வருகிற ஒரு சரும அலர்ஜி Urticaria. இது தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்ற பொருள் என்பதே இதற்கு அர்த்தம்.தற்போதுள்ள வாழ்க்கை முறையில் நாம் சாப்பிடும் உணவில் / நாம் சுவாசிக்கும் காற்றில் / நம் சுற்றுப்புறச்சூழலில் என்னவெல்லாம் கலந்திருக்கிறது என்பதை நாம் அறியோம். அதனால் இந்த காணாக்கடி இப்பொழுது நிறைய பேரை பாதிக்கிறது.
Urticaria-காணாக்கடியின் அறிகுறிகள் யாவை?
மாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி?
அறிகுறிகள்
இதய செயலிழப்பு உண்டாவதற்கான அறிகுறிகள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.
. மூச்சுத்திணறல்
. சோர்வு மற்றும் பலவீனம்
. வேகமான இதயத்துடிப்பு அல்லது அசாதாரணமான இதயத்துடிப்பு
. திடீர் எடை அதிகரிப்பு
. பசியுணர்வு இழப்பு
மூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு!
மலச்சிக்கல் மனிதனுக்கு பெரும் சிக்கல்…. இந்தச் சிக்கலை சிக்கல் ஏற்படுவதற்கு முன்பே தற்காத்துக்கொண்டால் மூலநோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். எவ்வாறு வாகனங்கள் இயங்க இன்ஜின் ஆயில் தேவைப்படுகிறதோ, அதேபோல் நம் உடல் இயங்குவதற்கும்லூப்ரிகன்ட் தேவை. இது குறையும்பட்சத்தில் நம் உடல் வறட்சியாகி, மலச்சிக்கல், மூலநோய் போன்ற பாதிப்புகள் உருவாகின்றன. சரியான உணவுப் பழக்கங்கள் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே மூலநோயை தவிர்க்கலாம்.
காச நோய் குழந்தையின்மையை உருவாக்குமா… ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
காச நோய் நுரையீரலை மட்டுமன்றி கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாயையும் பாதிப்பதால் குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படும் ஆபத்து இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் காச நோய் தினத்தையொட்டி (மார்ச் 24) ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்
<!–more–>
.
காச நோய் என்பது மைக்கோபாக்டீரியம் என்னும் கிருமியால் உருவாகும் தொற்றுநோய். இது உலக அளவில் மிகப் பெரும் தொற்று நோயாகவும் பார்க்கப்படுகிறது. உலக அளவில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 4,400 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
காச நோய், முதலில் நுரையீரலை பாதிக்கும். அடுத்தகட்டமாக கருப்பையை பாதிக்கிறது. அதுமட்டுமன்றி ஃபலோபியன் குழாயையும் பாதிக்கிறது இதனால் குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படும் ஆபத்து இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மைக்கோபாக்டீரியம் கருப்பையை பாதிக்கும்போது அது பிறப்புறுப்புக் காச நோயாக மாறுகிறது. இதனால் குழந்தை கருப்பையில் தங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் கரு இறந்துவிடும். பல மருத்துவர்கள் கரு இறப்பதற்கான காரணத்தைக் கண்டறியும்போதுதான் அதன் பிரச்னை தெரிய வரும் என ஆய்வில் கூறியுள்ளனர்.
”ஆண்களைக் காட்டிலும் பல பெண்கள் இந்த பிறப்புறுப்புக் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். பத்தில் இரண்டு பெண்கள் குழந்தை பெற்றெடுப்பதற்கான தன்மையை இழக்கின்றனர். சிலருக்கு இதனால் கருப்பைக் குழாய் மிகவும் அடர்த்தியாக மாறி கருப்பையில் கருவை உட்செலுத்த முடியாமல் பாதியிலேயே நின்று இயற்கையாகவே கருகலைப்பு ஏற்பட்டுவிடும்“ என ஷ்வேதா கோஸ்வாமி கூறியுள்ளார். இவர் நோய்டாவைச் சேர்ந்த ஜெய்பீ மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார்.
இந்த மைக்கோபாக்டீரியம், இரத்தத்தில் கலந்து மற்ற உறுப்புகளையும் தாக்குகிறதாம். குறிப்பாக இனப்பெருக்கத்தை நிகழ்த்தக் கூடிய உறுப்புகளான ஃபெலோபியன் குழாய், கருப்பை ஆகிய இடங்களை பாதிக்கிறது என ஆய்வில் கூறுகின்றனர்.”ஒருவேளை பெண்களுக்கு காசநோய் தாக்கக் கூடிய அறிகுறிகள் தெரிந்தால் , குறைந்த அளவில் ஃபெலோபியன் குழாயை பாதித்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நீக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவகையில் சிக்கல்களை ஏற்படுத்திவிடும். பின் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தன்மையை ஏற்படுத்திவிடும் “ என எச்சரிக்கிறார் கோஸ்வாமி.
இதைக் கண்டறிய சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான அடி வயிறு வலி, அதிகப்படியான இரத்தப்போக்கு, அதிக துர்நாற்றம், உடலுறவிற்குப் பின் இரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் இருப்பதும் இதன் அறிகுறிகளாகும்.
2018-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் 50 சதவீத இந்தியப் பெண்கள் பிறப்புறுப்பு காச நோயால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தது. அதுவும் 2011 ஆண்டு 19 சதவீதம் 2015 ஆண்டு 30 சதவீதம் என ஏறுமுகமாகவே இருந்துள்ளது என்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டிருந்தது. அதில் 75 சதவீதம் பிறப்புறுப்பு காச நோயால் குழந்தையின்மை பிரச்னை இருப்பதும், குழந்தையின்மைப் பிரச்னை கொண்ட 50-60 சதவீதப் பெண்களுக்கு பிறப்புறுப்புக் காசநோய் இருந்ததும் கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வு அதிர்ச்சித் தகவல் அளித்தது.
”பிறப்புறுப்பு காசநோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் தீர்க்கக் கூடிய நோயே. இருப்பினும் சமூகக் காரணங்களால் தனக்கு காச நோய் இருப்பதை வெளியில் சொல்வதை பல பெண்கள் தவிர்க்கின்றனர்” என ஷோபா குப்தா கூறுகிறார். இவர் டெல்லியைச் சேர்ந்த மதர்ஸ் லேப் ஐவிஎஃப் மையத்தில் மருத்துவ இயக்குநராக இருக்கிறார்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு ’உலக காச நோய் அறிக்கை 2018’ என ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் பத்து மில்லியன் மக்களில் 27 சதவீதம் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் அது 2017 ஆம் ஆண்டை விட அதிகம் என குறிப்பிட்டிருந்தது. உலக அளவில் 32 சதவீதம் பேர் காச நோயால் இறந்துள்ளனர். அதில் 27 சதவீதம் பேர் காச நோயுடன் ஹெச்.ஐ.வி தொற்றும் இருந்தது கண்டறியப்பட்டது.
”இன்று எப்பேர்பட்ட நோயானாலும் அதைக் கண்டறியும் கருவிகள் இருக்கின்றன. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு ஆரோக்கியமான வாழை வாழ வைக்க வேண்டியதும் அவசியம் “ என ராஜ்குமார் குறிப்பிடுகிறார். இவர் டெல்லியைச் சேர்ந்த இந்திய முதுகெலும்பு காயங்கள் மையத்தில் உள் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார்.
பொய் வலி… நிஜ சிகிச்சை!
தனது இரு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர், கணவரும் வேலைக்குப் போய் விட, தினமும் தனிமையில் இருக்க நேரிட்ட அந்த பெண்மணி, தனக்கு உடல் முழுதும் வலிப்பதாக அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்.
அவரது கணவர் அந்த பெண்மணியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பரிசோதனைகளில் உடல்ரீதியான எந்த பிரச்னையும் அந்த பெண்ணுக்கு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவருக்கு வந்திருப்பது Psychosomatic disorder என்றும், மனநல மருத்துவரை அணுகும்படியும் அந்த பொது மருத்துவர் கூறி இருக்கிறார்.
Psychosomatic disorder என்றால் என்ன? Continue reading →
கரு கலையப் போவதை ஒரு வாரத்துக்கு முன்னாடியே எப்படி கண்டுபிடிக்கிறது?
கர்ப்ப காலம்
அமெரிக்க மருத்துவ கல்லூரி மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் (ACOG) கூற்றுப் படி, கருச்சிதைவு என்பது கர்ப்ப இழப்பு தொடர்பான ஒரு மிகவும் பொதுவான வகை ஆகும். அனைத்து மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கருத்தரிப்பில், 10-25 % கருச்சிதைவில் முடிவடையும் என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
Continue reading →